அக்டோபர் 18, 2015

வலைப்பூ நமது தொடக்கமென்றால் முடிவு விக்கிபீடியாவில் இருக்கட்டும்

2015 வலைப்பதிவர் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற விக்கி மீடியா-இந்தியா திட்ட இயக்குநர் திருமிகு அ. இரவிசங்கர் அவர்கள் விக்கிபீடியாவில் எழுதவதற்கும் வலைப்பூக்களில் எழுவதற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைத்தார்.   வலைப்பூக்களில் எழுத எல்லையற்ற சுதந்திரம் இருக்கிறது.  யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.  விக்கிபீடியா களஞ்சியம் ஒரு முறைபடுத்தப்பட்ட அமைப்பு.  எப்படி பின்னூட்டங்கள் வலைப்பூவின் ஆசிரியர் மட்டறுத்தலுக்கு (comment moderation) பின் வெளியிடப்படுகிறதோ, விக்கிபிடீயாவில் எழுதப் படும் கட்டுரை அதன் தர நெறிமுறைகளுக்கு இருந்தால் மட்டும்தான் வெளியிடப்படும்.  வலைப்பூவின் ஆசிரியர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்து எந்தெந்த பின்னூட்டங்கள் வெளிவர வேண்டும் என முடிவெடுக்கலாம்.  விக்கிபிடீயாவில் கட்டுரைகளை நெறிபடுத்தும் வல்லுனர் குழு பெரும்பாலும் நன்கு கற்றறிந்த சான்றோர்களாகவே இருக்கின்றனர்.  விக்கிபிடீயாவில் எழுதும் அறிஞர் பெருமக்களுக்கு  முனைவர். ஜம்புலிங்கம் ஐயா போன்றவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

பதிவர் அறிமுகத்தில் இணையம் ஒரு பெரும் குப்பை என்றேன்.  பதிவர் அறிமுகம் என்கிற பகுதியில் வேறு செய்திகளைப் பேசுவது முறையில்லை என்றாலும், இணையத்தேடலில் தமிழின் நிலை அதிகமானவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றே சொன்னேன்.  ஒருவேளை இந்த பதிவு முன்னமே எழுதியிருந்தால் அதையும் பேசியிருக்க மாட்டேன்.  மற்ற பதிவர்கள், விழாக் குழுவினர் மன்னித்தருள வேண்டும். 

இந்தப் பதிவின் முன்னோட்டத்தை வலைப்பதிவர் திருவிழா காணொளியில் 01:21:30 லிருந்து 01:23:30 வரை காணலாம்.


எழுத்தாளர் திருமிகு எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றுகையில் நூலகத்தில் ஒன்றைத் தேடிப் படிப்பதற்கும் இணையத்தில் தேடிப் படிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகக் கூறினார்.   இணையத்தில் ஒன்றைத் தேடும்போது பெரு வெள்ளத்தில் அடித்து வரப்படும் செத்தை, குப்பை போன்ற அனைத்தையும் அள்ளி வரும்.  கழனிகளை செம்மைபடுத்தும் கனிமங்களும் அதில்தான் வருகிறது.  எல்லாவற்றையும் வலைப்பூவில் எழுத வேண்டாம் என்றும், மின்னூலாகவும் எழுதுங்கள் என்ற வேண்டுகோளை விடுத்தார்.

மாணவர்கள் மத்தியில் விக்கிபீடியா போன்று மின்னூல்கள் இன்னும் சென்றடையவில்லை.   சிலேட்டு பலகைக்கு மாற்றாக ஐபேட், ஆண்டராய்ட் டேப்லட் போன்றவை பெருகும்போது மின்னூல்களின் தேவையும் அதிகரிக்கும்.  அதுவரை மின்னூல் என்றால் நமக்கு அமேசான் கிண்டுலும் (இது ஒரு டிஜிட்டல்/மின்னூல் புத்தகங்களை படிக்கக் கூடிய சாதனம்) ePubம் நினைவிற்கு வராது, நம்மை பொறுத்தவரை கணினியில் சேமித்து பின்னர் படிப்பதற்கு உதவும் pdf கோப்பே மின்னூல்.

மின்னூலாக வெளியிடுவதில் உள்ள குறை, வலையில் இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருங்குறி தகுதரம் (யுனிகோடு UTF-8, UTF-16) போன்ற ஒன்றை பயன்படுத்தாவிட்டால் அதில் தகவல்களை தேடிப் படிப்பது சிரமமாகிவிடும்.   நீங்கள் ஒரு pdf மின்னூலை உருவாக்க உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு அழகான எழுத்துருவை பயன்படுத்துவீர்கள்.  நான் ஒன்றை பயன்படுத்துவேன்.  இதில் தகவல் தேடலுக்கான ஒருமித்த மென்பொருளை யார் எழுதுவது?  உங்களிடம் இருக்கும் தமிழ் pdf நூல்களை தேடிப் பாருங்கள், உணர்ந்து கொள்வீர்கள்.  

இணையத்தில் தமிழில் படங்களை ( தமிழில் வெளிவந்த திருட்டு விசிடி புதுபடமென நினைத்துக் கொண்டால் வருந்துகிறேன் : ) தேடும் நிலை குறித்த அருமையான கட்டுரையை கீதமஞ்சரி வலைப்பூவில் படிக்கக் கோருகிறேன்.

வலைப்பதிவர் திருவிழாவிற்காக தமிழ் இணையப் பல்கலைகழகம் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை
தேடுவோம் கண்டடைவோம் http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_28.html

இனி எழுத்து விளக்கங்களை விட, ஓராயிரம் பக்க விளக்கங்களை மௌனமாக விளக்கும் சில படங்களைக் காண்போம்.

கூகிள் தேடலில் அக்டோபர் 18, 2015 அன்று எனது தேடலுக்கு விடையாகக் கிடைத்தவை.

எச்சரிக்கை:  கீழுள்ள படம் மிகுந்த ஆபாசமான தேடல் விடையைக் கொண்டது. 
அம்மா, அந்த களங்கமில்லாத சொல்லிற்கும் சகிக்க முடியாத ஆபாசத்தை ஊட்டிய வலைப்பதிவுகளின் தொகுப்பு.  மாணவர்கள், தாய்மார்கள் படத்தை பெரிது படுத்தி பார்ப்பதை தவிர்க்கவும்.



Sponsored content.  முதல் பக்கங்களில் வரும் தேடல் விடையனைத்தும் நாம் தேடுபவையாக இருக்காது.  ஆங்கிலத்தில் தேடுவதும் இதற்கு விதிவிலக்கல்ல.  தமிழில் தேடுவதைவிட ஆங்கிலத்தில் தேடுபவை பரவாயில்லை.


விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை தேடல் பொறிகள் முன்னிலைப் படுத்தும்.  நல்ல கட்டுரைகளை விக்கிபீடியாவில் எழுதுவோம்.


விடைகள் எப்படி வருகிறதேன்று விக்கிபிடீயாவை தேடிப் பார்ப்போம்.  அடடா, அடடா அற்புதம்!!!



முதலில் விக்கிபிடீயாவில் தேடு என தேடல் பொறிக்கு அறிவுருத்தலாம்.  அட இது கூட நல்லாதான் இருக்கு.



அறுவருப்பான தேடல் விடைகளால் நாம் நொந்து கொள்ள வேண்டியது தேடல் பொறிகளை அல்ல.  தேடல் பொறிகள் இணையத்தின் கொடை.  நல்ல தேடல் விடைகள் வர நல்ல நல்ல பதிவுகளை அதிகம் பதிவிடுவோம்.   தனிமத தாக்குதல்களையும், சாதி சமய பிரிவினைகளை ஏற்படுத்தும் வலைதளங்களையும், காமத்தை கொச்சை படுத்தும் தளங்களையும் புறக்கனிப்பதன் மூலம் நம்மால் ஆன சிறிய பங்களிப்பை செய்ய முடியும்.  பெரிய பங்களிப்புக்கு விக்கிபிடீயாவில் எழுதலாம்.


- வாழ்க வளமுடன்

12 கருத்துகள் :

  1. மிக அருமையான, தரவுகளுடன் கூடிய பதிவு நண்பரே.
    இந்த விழாவில் நமக்குக் கிடைத்த சிறந்த வழிகாட்டுதல்களில் திரு இரவிசங்கர் அவர்களின் உரையும் ஒன்று எனில் அதை மிகச்சிறந்த விளக்கங்களால் எளிமைப்படுத்தி எச்சரிக்கையோடு தந்திருக்கும் தங்களின் இந்தப் பதிவை அப்படியே எடுத்து -தங்களுக்கு நன்றி தெரிவித்து, தங்கள் தளத்தின் யுஆர்எல் இணைப்பைத் தந்து வெளியிட விரும்புகிறேன்.
    தங்கள் அனுமதி தேவை. காத்திருக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வலைப்பூவின் உரிமையை Creative Commons Attribution 3.0 Unported Licenseல் வெளியிட்டுள்ளேன். ஆகவே இந்த வலைப்பூவில் உள்ள அனைத்துப் பதிவுகளையும் எந்த ஒரு முன்னனுமதி இல்லாமல் எவர் வேண்டுமானாலும் வெளியிடலாம். தங்களின் ஊக்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  2. உண்மைதான்..தேடலில் தரமான பதிவுகளை முன்னிலைப்படுத்த நம்மாலானவற்றைச் செய்ய வேண்டும். அழகாக விளக்கிப் பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விக்கிபிடீயாவிலும் பங்களிப்பதன் மூலம் இதை சாத்தியப் படுத்த இயலும்.

      நீக்கு
  3. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன் நண்பரே
    அருமை
    இனி தொடர்வேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்போதுதான் முதல்முறையாக பொது பதிவுகளை எழுதுகிறேன். தங்கள் வருகை இந்த வலைப்பூவிற்கு பெருமை சேர்த்தது.

      நீக்கு
  4. திரு.ரவி அவர்கள் கருத்து ஏற்புடையது. நானும் பல இடங்களில் சொல்வது. வலைப்பதிவு வேறு, விக்கிப்பீடியா வேறு என்று. இதனால் சில இடங்களில் கருத்து முரண்பாடு மற்றும் முகசுளிப்புக் கூட ஏற்பட்டதுண்டு. சிங்கப்பூரில் நானும் மயூர்நாதன் அவர்களும் இதுபற்றி அதிகமாக உரையாடினோம். நல்லது

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான்...விக்கிபீடியாத்தான் முடிவாக அமைதல் வேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. Good article, I'm from thumitham.com, thank you for your comments :)

    பதிலளிநீக்கு